Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் துர்பத் நகரில் பிஎன்எஸ் சித்திக் கடற்படை தளம் அமைந்துள்ளது. அங்கு சீனாவின் ட்ரோன்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிஎன்எஸ் சித்திக் கடற்படை தளத்துக்குள் நேற்று முன்தினம் இரவு 4 மர்ம நபர்கள் நுழைய முயன்றுள்ளனர்.
இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட கடற்படை வீரர்கள் ஊடுருவல் முயற்சியை முறியடித்துள்ளனர்.இதுகுறித்து இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன் (ஐஎஸ்பிஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிஎன்எஸ் சித்திக் கடற்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்ததீவிரவாதிகள் முயற்சி செய்தனர்.இதையடுத்து, உஷாரான கடற்படையினர், அருகில் இருந்த பாதுகாப்புப் படையினரை வரவழைத்தனர்.
தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு வீரரும் அனைத்து (4) தீவிரவாதிகளும் உயிரிழந்தனர். இதன்மூலம் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.